புதுடெல்லி: பீகார் மாநிலம் கதிகாரில் பேருந்தும், பிக்கப் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக கதிஹார் போலீசார் தெரிவித்தனர்.
“இன்று, ஏப்ரல் 11, 2026 அன்று, கதிஹார் மாவட்டத்தில் உள்ள கோர்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெராபாரி அருகே பேருந்து மற்றும் பிக்கப் வாகனம் இடையே பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். “”விபத்தில் காயமடைந்த சுமார் 25 பேர் மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு ஷிகர் சவுத்ரியின் கூற்றுப்படி, கதிஹாவின் கோர்ஹா பிளாக்கில் NH-31 இல் விபத்து நடந்தது.


